ஹரியானாவில் தாக்கப்பட்ட வலு தூக்குதல் வீரர் தன்கர் உயிரிழப்பு

ஹரியானாவில் தாக்கப்பட்ட வலு தூக்குதல் வீரர் தன்கர் உயிரிழப்பு

ஹரி​யானா மாநிலம் ரோத்​தக் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ரோஹித் தன்​கர் (28). தேசிய அளவி​லான பாரா வலு தூக்​குதல் வீர​ரான இவர், கடந்த 27-ல் ரிவாரி நகரில் உள்ள தனது உறவினர் ஒரு​வரின் இல்​லத்​தில் நடந்த திருமண விழா​வில் பங்​கேற்​றார்.

அங்கு மணமக​ன் உறவினர்​களின் தவறான நடத்​தையை ரோஹித் கண்​டித்​துள்​ளார். இதனால் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது. பின்​னர் காரில் தனது வீட்​டுக்கு சென்​று​கொண்​டிருந்த ரோஹித்தை இடைமறித்த ஒரு கும்​பல், ஹாக்கி கம்​பு, இரும்பு கம்பி உள்​ளிட்​ட​வற்​றால் தாக்​குதல் நடத்தி உள்​ளது. இதில் படு​காயமடைந்த ரோஹித் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். 2 நாட்​களுக்​குப் பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்​.