ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை வழக்கு! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை வழக்கு! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

 ஜப்​பான் முன்​னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்​கில், குற்​ற​வாளிக்கு அந்​நாட்டு மாவட்ட நீதி​மன்​றம் நேற்று ஆயுள் தண்​டனை விதித்​துத் தீர்ப்​பளித்​தது.

ஜப்​பானின் சுதந்​திர ஜனநாயக கட்​சித் தலை​வ​ராக​வும் அந்நாட்டின் பிரதம​ராக​வும் (டிச.2012 முதல் செப்​.2020 வரை) ஷின்சோ அபே பதவி வகித்​துள்​ளார். கடந்த 2022 ஜூலை 8ம் தேதி மேற்கு ஜப்​பானிய நகர​மான நாரா​வில் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டிருந்த அபே துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். துப்​பாக்​கி​யால் சுட்ட டெட்​சுயா யமகாமி (45) சம்பவ இடத்​திலேயே கைது செய்​யப்​பட்​டார்.

இந்​தத் துப்​பாக்​கிச் சூடு தொடர்​பான வழக்கு விசா​ரணை​யின்​போது, தன் மீதான கொலைக் குற்​றச்​சாட்டை யமகாமி ஒப்​புக்​கொண்​டார். இரு தரப்பு வாதம் முடிந்​ததையடுத்​து, நாரா மாவட்ட நீதி​மன்​றம், அரசுத் தரப்பு வழக்​கறிஞர்​களின் கோரிக்​கையை ஏற்று, குற்​ற​வாளிக்கு ஆயுள் தண்​டனை வழங்கி நேற்று உத்தரவிட்​டது. தென் ​கொரி​யா​வின் சர்ச்​சைக்​குரிய ஒரு மத அமைப்​பில் தீவிர உறுப்​பின​ராக இருந்​துள்​ளார் யமகாமி​யின் தாய்.

இதன் அடிப்​படை​யில், அந்த அமைப்​புக்​குப் பெரும் தொகையை நன்​கொடை​யாக வழங்​கிய​தால் அவரது குடும்​பம் வறுமை நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. இந்த நிலைக்​குக் காரண​மான அந்த அமைப்​புக்கு ஆதர​வாக இருந்​த​தால் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்​ற​தாக யமகாமி வாக்​குமூலம்​ அளித்​துள்​ளார்​.