பாலியல் புகாரால் தற்கொலை விவகாரம்: கேரளாவில் பெண் கைது

பாலியல் புகாரால் தற்கொலை விவகாரம்: கேரளாவில் பெண் கைது

கடந்த 16ம் தேதி கேரளாவைச் சேர்ந்த பெண் பயணி ஷிம்​ஜிதா சமூக வலை​தளத்​தில் வீடியோ ஒன்றை வெளியிட்​டார். அதில் அரசுப் பேருந்​தில் பயணம் செய்​த​போது 42 வயது (தீபக்) மதிக்​கத்​தக்க நபர் தன்​னிடம் தவறாக நடந்​து​கொண்​ட​தாக குறிப்​பிட்​டிருந்​தார்.

சுமார் 18 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ​வில், நெரிசலான பேருந்​தில் தீபக்​கின் கை அந்​தப் பெண்​ணின் மீது உரசுவது போலக் காட்​சிகள் இடம்​பெற்​றிருந்​தன. இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் மிக வேக​மாகப் பரவி, பல கோடி மக்​களின் பார்​வை​களைப் பெற்றது. இதைப் பார்த்த ​மக்​கள் பலர், வீடியோ​வில் இடம்​பெற்றிருந்த தீபக்கை திட்​டித் தீர்த்​தனர்.

மேலும், சிலர் பேருந்​தில் அதிக அளவி​லான மக்​கள் செல்​லும் நிலை​யில் அது தற்​செய​லாக நடந்​திருக்​கலாம் என்​றும், தீபக் வேண்​டுமென்றே அவ்​வாறு செய்​திருக்க முடி​யாது என்​றும் கருத்​துத் தெரி​வித்​திருந்​தனர். இந்​நிலை​யில் அந்த வீடியோ வைரலான​தால் கடும் மன உளைச்​சலுக்கு ஆளான தனி​யார் நிறுவன ஊழிய​ரான தீபக் தற்​கொலை செய்​து ​கொண்​டார்.

இதையடுத்து தீபக்​கின் குடும்​பத்​தினர் அந்​தப் பெண்​ணுக்கு எதி​ராகப் புகார் அளித்​துள்​ளதை தொடர்ந்​து, கோழிக்​ கோடு மருத்​து​வக் கல்​லூரி போலீ​ஸார் அந்த பெண் மீது வழக்​குப் பதிவு செய்​தனர். இந்​நிலை​யில், வீடியோவை வெளி​யிட்ட பெண்ணை போலீ​ஸார் கைது செய்​தனர். நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்பட்ட அவரை 14 நாள் நீதி​மன்​றக் காவலில் வைக்​கு​மாறு மாஜிஸ்​திரேட் உத்​தர​விட்​டார்.