கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

நண்​பரை கட்​டை​யால் அடித்​துக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்​டனை விதித்து சென்னை கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை காசிமேடு சிங்​கார​வேலன் நகரைச் சேர்ந்த மீனவர் சுரேஷ்(27). இவரும் அதே பகு​தி​யைச் சேர்ந்த சதீஷ்கு​மாரும் (23) நண்​பர்​கள். இரு​வருக்​குமிடையே பணம், கொடுக்​கல் வாங்​கலில் தகராறு இருந்​தது.

கடந்த 2015-ம் ஆண்டு பிப்.6 அன்று உணவகம் முன்​பாக நின்று கொண்​டிருந்த இரு​வருக்​குமிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு தகராறு முற்​றியது. ஆத்​திரமடைந்த சதீஷ்கு​மார் கட்​டையை எடுத்து சுரேஷின் தலை​யில் அடித்​தார்.

இதில் படுகாயமடைந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி இறந்​தார். இது தொடர்​பாக காசிமேடு போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து சதீஷ்கு​மாரை கைது செய்​தனர்.

இந்த வழக்கு சென்னை 3-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி கே.கீ​தா​ராணி முன்​பாக நடந்​தது. போலீஸ் தரப்​பில் கூடு​தல் அரசு வழக்​கறிஞர் டி.சுரேஷ் ஆஜராகி வாதிட்​டார்.

அதையடுத்து நீதிப​தி, குற்​றம் சாட்​டப்​பட்ட சதீஷ்கு​மாருக்கு ஆயுள் தண்​டனை மற்​றும் ரூ.5 ஆயிரம் அபராதம் வி​தித்​து தீர்ப்பளித்துள்ளார்.