பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் வருவதை முன்னிட்டு மதுராந்தகத்தில் போக்குவரத்து மாற்றம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வாகன போக்குவரத்து மாற்றம் தொடர்பாக காவல்துறை அறி விப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உருவாகியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கூட்டம் நடைபெறும் இடத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளது. பத்து இடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் கட்சி தொண்டர்களின் வசதிக்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
இதன்படி, ஜன.23-ம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இச்சாலையில் வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஈசிஆர் சாலை மூலம் மரக்காணம் வழியாக திண்டிவனம் செல்ல வேண்டும். திண்டிவனம் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு செல்லலாம்.