ஈரான் போராட்ட உயிரிழப்பு 3,117 - அரசு தொலைக்காட்சி தகவல்
ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தொலைக்காட்சி முதல் முறையாகத் தெரிவித்துள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28-ம் தேதி தொடங்கிய போராட்டம் கலவரமாக மாறியது. குறிப்பாக ஹிஜாப் அணிவது உட்பட பல கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். இதில் 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியது. இதை ஈரான் அரசு மறுத்தது.
இந்நிலையில் போராட்டத்தில் இதுவரை 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி முதல் முறையாக கடந்த புதன்கிழமை தகவல் வெளியிட்டது.
ஈரானில் தற்போது போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.