நடிகை தற்கொலை... பரபரப்பு புதிய தகவல்
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (39). தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர் திருமணமாகி முத்தியால்பேட்டையில் வசித்து வந்தார்.
ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் ராஜேஸ்வரி இருந்துள்ளார்.