‘தலை​வர் தம்பி தலை​மை​யில்’ படத்துக்கு இயக்​குநர் தான் ஹீரோ: ஜீவா

‘தலை​வர் தம்பி தலை​மை​யில்’ படத்துக்கு இயக்​குநர் தான் ஹீரோ: ஜீவா

நடிகர் ஜீவா, கதை​யின் நாயக​னாக நடித்​துள்ள ‘தலை​வர் தம்பி தலை​மை​யில்’ படம் ஜன.15-ம் தேதி வெளி​யானது. இதில் தம்பி ராமை​யா, இளவரசு, பிரார்த்​த​னா, ஜெய்​வந்த், ஜென்​சன் திவாகர் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

நிதேஷ் சகாதேவ் இயக்​கிய இப்​படத்தை கண்​ணன் ரவி குழு​மம் சார்​பில் கண்​ணன் ரவி தயாரித்​துள்​ளார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்​துள்ள இப்​படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து இதன் வெற்​றி​விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

நடிகர் ஜீவா பேசும்​போது, ”நாங்​கள் கடந்த 4, 5 மாதங்​களாகக் குமுளி​யில் ஒரு குடும்​ப​மாகத் தங்கி இப்​படத்தை எடுத்​தோம். அங்​கிருந்த மக்​கள் கிடா வெட்​டிச் சாமி கும்​பிட்​டு, இந்​தப் படம் வெற்றி அடை​யும் என்று வாழ்த்​தி​னார்​கள். படப்​பிடிப்பு முடிந்து கிளம்​பும்​போது, கண்​கலங்கி வழியனுப்பி வைத்​தார்​கள். இதன் வெற்​றிக்கு அவர்​களின் அன்​பும் முக்​கியக் காரணம்.

இயக்​குநர் நிதேஷ் சகாதேவ்​தான் இந்​தப் படத்​தின் உண்​மை​யான ஹீரோ. ஒவ்​வொரு நடிகரிட​மிருந்​தும் நடிப்பை வெளிக்​கொண்டு வந்​து, காட்​சிகளை அவ்​வப்​போது மெரு​கேற்​றி​னார். ஒரு நடிக​ராக எனக்​குத் தமிழில் ஒரு பெரிய வெற்​றியை இப்​படம் மூலம் கொடுத்​திருக்​கிறார். நடிகர் வி.டி.​வி.கணேஷ்​தான் இந்​தக் கதையை சிபாரிசு செய்​தார். தயாரிப்​பாளர் கண்​ணன் ரவியைச் சந்​தித்​தோம். அப்​போதே அட்​வான்ஸ் கொடுத்​தார். அந்த நம்​பிக்​கை ​தான் இன்று வெற்​றி​யாக மாறி​யிருக்​கிறது” என்​றார்.

இவ்​விழா​வில் தனது மகனை மேடை​யில் அறி​முகப்​படுத்​தி​னார் ஜீவா. அவருடைய புகைப்​படம்​ சமூக வலை​தளங்​களில்​ பரவி வருகிறது.