திருமண விமர்சனம் குறித்து பிரபல தமிழ் நடிகை ஓப்பன் டாக்!

திருமண விமர்சனம் குறித்து பிரபல தமிழ் நடிகை ஓப்பன் டாக்!

40 மற்றும் 50 வயதை கடந்தும் இந்திய சினிமாவில் பல நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு திருணம் பற்றிய வதந்திகளும் அவ்வப்போது இணையத்தில் வந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை தான் சந்தித்த திருமணம் குறித்த விமர்சனங்களை வேதனையுடன் தெரிவித்தார்.

ஆம் அந்த நடிகை வேறு யாருமில்லை. நடிகை மீனாட்சி சவுத்ரி தான். விஜய்யுடன் தி கோட், ஆர்.ஜே.பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் மீனாட்சி சவுத்ரி பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மீனாட்சி சவுத்ரி தான் இளமை பருவத்தில் எதிர்கொண்ட விமர்சனம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,  “ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். கிராமத்தில் எனது நிறம் மற்றும் அழகு குறித்து விமர்சனம் செய்வது மட்டுமின்றி உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என கூறி கிண்டல் செய்து வந்தனர். இப்படி பல விமர்சனங்கள் என்னை காயப்படுத்தின.

இதனால் நான் வைராக்கியத்துடன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைத்து டாக்டராக விரும்பினேன். நான் அழகாக இருக்கிறேன் என்பதை உலகுக்கு காட்ட நினைத்தேன். நான் என்ன வேண்டுமானாலும் செய்ய என் குடும்பம் எனக்கு சுதந்திரம் கொடுத்தது. அழகை நிரூபிக்க மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன்.

ஜெயித்ததை கொண்டாட கிராமத்திற்கு போனேன். பழங்கால மக்கள் வாழும் கிராமம் என்பதால் முதலில் என்னை விமர்சித்தார்கள். மோசமான தொழிலில் ஈடுபடுகிறேன். பிகினி அணிவது ஏற்றுக் கொள்ள முடியாது என எல்லோரும் என்னை எதிர்த்தார்கள். ஆனால் இப்போது என்னால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது என்னை மிகவும் மதித்து வரவேற்கிறார்கள்.” என்று அவர் கூறினார்.