காங்கோ சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழப்பு
காங்கோ நாட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. சுமார் 120-க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் காங்கோவின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.
இது செல்போன், கணினி, விமான பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ரூபையா சுரங்கத்தில் சுமார் 4,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை. அவர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.