‘கொலை செய்யப்பட்டதால் எங்கள் காதல் அழியாது’ - உயிரிழந்த காதலன் உடலுடன் திருமணம் செய்து கொண்ட காதலி சபதம்

‘கொலை செய்யப்பட்டதால் எங்கள் காதல் அழியாது’ - உயிரிழந்த காதலன் உடலுடன் திருமணம் செய்து கொண்ட காதலி சபதம்

மகா​ராஷ்டி​ரா​வின் நாந்​தேட் நகரத்​தைச் சேர்ந்த ஆஞ்​சலுக்கு அவரது சகோதரர் மூல​மாக பழக்​க​மானவர் 20 வயதான சாக்​சம் டாடே. ஆஞ்​சல் வீட்​டுக்கு டாடே அடிக்​கடி வந்​து​போன​தால் இரு​வருக்​கும் காதல் மலர்ந்​தது.

3 ஆண்​டு​களாக உயிருக்கு உயி​ராக காதலித்து வந்த அந்த ஜோடி வெவ்​வெறு சமூகம் என்​ப​தால் இரு​வீட்​டாரும் எதிர்ப்​புத் தெரிவிக்க ஆரம்​பித்​தனர். பல மிரட்​டல்​கள் வந்​த​போதும் அவர்​கள் காதலை கைவிட​வில்​லை.

இதனிடையே டாடேவை திரு​மணம் செய்ய ஆஞ்​சல் முடிவு செய்​தார். இதனை அறிந்து கொண்ட ஆஞ்​சலின் சகோதரர் மற்​றும் அவரது தந்தை ஆகியோர் சேர்ந்து காதலன் டாடேவை கடந்த வியாழக்​கிழமை கடத்தி சென்று அடித்து உதைத்​ததுடன் துப்​பாக்​கி​யால் சுட்டு அவரது தலையை கற்​களைக் கொண்டு சிதைத்​தனர்.

இதனை அறிந்த ஆஞ்​சல் ஆவேச​மாக வீட்டை விட்டு வெளி​யேறி டாடே​வின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​றார். தனது காதலனின் சடலத்​துக்கு முன்​பாகவே உடம்​பில் மஞ்​சள் தேய்த்​து, நெற்​றி​யில் குங்​குமம் வைத்து அவரை திரு​மணம் செய்​து​கொண்​டார். எஞ்​சிய வாழ்க்​கையை டாடே​வின் வீட்​டில் இறு​திவரை அவரது மனை​வி​யாக வாழ்வேன். அவரது குடும்பத்தில் மருமகளாக இருப்பேன் என்று ஆஞ்​சல் சபதமெடுத்​தார்.

இதுகுறித்து ஆஞ்​சல் கூறுகை​யில், “டாடே இறந்​தா​லும் எங்​கள் காதல் சாக​வில்​லை. கடைசி​யில் எங்​கள் காதல்​தான் வெற்​றி​பெற்​றது. எங்​களை பிரிக்க நினைத்த எனது தந்​தை​யும், சகோதரரும் தோற்​றுப்​போய்​விட்​டனர். டாடேவை கொன்ற அவர்​களுக்கு மரண தண்​டனை வி​திக்​க வேண்​டும்” என்​றார்​.