“இந்துக்கள் முதலில் மதத்தைப் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும்” - பவன் கல்யாண்

“இந்துக்கள் முதலில் மதத்தைப் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும்” - பவன் கல்யாண்

 “இந்துக்கள் முதலில் மதத்தைப் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும். யாரும் நம் மதத்தை தாக்கத் துணியாதபடி குரல் எழுப்ப வேண்டும்.” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தினார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் நேற்று மாலை பவன் கல்யாண் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அக்கோயிலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “சனாதன தர்மம் ஒருபோதும் குருட்டு நம்பிக்கையின் சின்னம் அல்ல; அது மனிதகுலத்திற்கு ஒரு அறிவியல் ஞானப் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல். மற்றவர்கள் நம் தர்மத்தைத் தாக்குகிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, முதலில் அதைப் பாதுகாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், யாரும் நம்மைத் தாக்கத் துணியக்கூடாது என்பதற்காக நம் குரலை உயர்த்த வேண்டும்.

இந்திய அரசியலமைப்பின் முகவுரையில், வழிகாட்டுதல் கோட்பாடுகள் அடங்கிய பக்கம், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசிப்பதை சித்தரிக்கிறது.