ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது தமிழகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது தமிழகம்

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழகம் - ஜார்க்​கண்ட் அணி​கள் இடையி​லான போட்டி கோவை​யில் உள்ள ராமகிருஷ்ணா கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. டாஸ் வென்று பேட் செய்த ஜார்க்​கண்ட் அணி முதல் இன்​னிங்​ஸில் 132.1 ஓவர்​களில் 419 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக இஷான் கிஷன் 173 ரன்​களும், சாஹில் ராஜ் 77 ரன்​களும் சேர்த்​தனர்.

இதையடுத்து பேட் செய்த தமிழக அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 11 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 18 ரன்​கள் எடுத்​திருந்​தது. பாலசுப்​ரமணி​யன் சச்​சின் 0, கேப்​டன் நாராயண் ஜெகதீசன் 3, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 9, ஆந்த்ரே சித்​தார்த் 2, பாபா இந்​திரஜித் 0 ரன்​களில் நடையை கட்​டினர். அம்ப்​ரிஷ் ரன் ஏதும் எடுக்​காமலும், ஷாருக் கான் 4 ரன்​களு​ட​னும் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழக அணி 50.4 ஓவர்​களில் 93 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ ஆன் பெற்​றது. ஷாருக் கான் 5, அம்ப்​ரிஷ் 28, குர்​ஜப்​னீத் சிங் 12, சந்​திரசேகர் 9, ஜெக​நாதன் ஹெம்​சுதேஷன் 14 ரன்​களில் நடையை கட்​டினர். ஜார்க்​கண்ட் அணி தரப்​பில் ஜத்​தின் பாண்டே 5, சாஹில் ராஜ் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

பாலோ-ஆன் பெற்ற தமிழக 326 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடியது. 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் தமிழக அணி 27 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 52 ரன்​கள் எடுத்​திருந்​தது. அம்ப்​ரிஷ் 15, நாராயண் ஜெகதீசன் 21, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 8 ரன்​களில் நடையை கட்​டினர். ஆந்த்ரே சித்​தார்த் 3, ஜெக​நாதன் ஹெம்​சுதேஷன் 3 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். கைவசம் 7 விக்​கெட்​கள் இருக்க 274 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்று கடைசி நாள் ஆட்​டத்​தை எதிர்​கொள்​கிறது தமிழக அணி.