செல்போன் செயலி மூலம் மும்பை தொழிலதிபரிடம் ரூ.11 கோடி மோசடி

செல்போன் செயலி மூலம் மும்பை தொழிலதிபரிடம் ரூ.11 கோடி மோசடி

செல்​போன் செயலி மூலம் மும்​பையைச் சேர்ந்த தொழில​திபர் ஒரு​வரிடம் ரூ.11 கோடி மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது.

தெற்கு மும்பை சர்ச்​கேட் பகு​தி​யைச் சேர்ந்த 68 வயது தொழில​திபர் பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்ய திட்​ட​மிட்டுள்ளார். அப்​போது சமூக வலை​தளத்​தில் விளம்​பரம் ஒன்றை அவர் பார்த்​துள்​ளார். அதனைத் தொடர்ந்து மோகன் சர்மா என்ற பெயரில் வாட்​ஸ்​அப்​பில் பேசிய ஒரு​வர் பங்​குச் சந்தை ஆலோசக​ராக அறி​முக​மாகி​யுள்​ளார்.

‘‘டிரேடர் டைட்​டன் விஐபி 46” என்ற வாட்​ஸ்​அப் குழு​வில் இணைக்​கப்​பட்ட அந்த தொழில​திபரிடம் பல முதலீட்​டாளர்​கள் தங்​களுக்கு அதிக லாபம் கிடைத்​தாக கூறிய ஸ்கிரீன்​ஷாட்​களை அந்த குழு​வில் பகிர்ந்​துள்​ளனர். இதனை உண்​மையென நம்​பிய அந்த தொழில​திபரிடம் பிரீமி​யம் உறுப்​பின​ராக மாற தனிப்பட்ட டிரேடிங் செயலியை பதி​விறக்​கம் செய்யுமாறு கூறினர்.

அதில் கணக்கு தொடங்​கிய​வுடன், தொழில​திபர் பல்​வேறு வங்கிக் கணக்​கு​களுக்கு பணத்தை அனுப்​பி​யுள்​ளார். அவர் அனுப்​பும் பணம் உடனடி​யாக அந்​தச் செயலி​யின் வேலட்​டில் பிர​திபலிக்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டிருந்​தது. இதனால் உண்​மை​யாக வர்த்​தகம் நடப்​ப​தாக நம்​பி​யுள்​ளார்.

விங்ஸ் ஆப் ப்ரீடம் போன்ற பல்​வேறு குழுக்​கள் மூலம் அவருக்​குப் பயிற்சி மற்​றும் ஆலோ​சனை​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன. கடந்த டிசம்​பர் 29, 2025 முதல் ஜனவரி 19, 2026 வரையி​லான குறுகிய காலத்​திற்​குள் சுமார் ரூ.10.98 கோடியை அவர் முதலீடு செய்​தார்.

இந்​நிலை​யில், தனது முதலீட்​டை திரும்​பப் பெற தொழில​திபர் முயன்​ற​போது பணத்​தைத் திரும்​பப் பெற வேண்​டு​மா​னால் ரூ.8 கோடி அபராதம் செலுத்த வேண்​டும் என்று மிரட்​டி​யுள்​ளனர். அப்​போது​தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்​தார். சைபர் க்ரைமில் தொழில​திபர் புகார் அளித்​ததைத் தொடர்ந்து அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் மீது மோசடி, கூட்​டுச் சதி உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்து போலீ​ஸார் தீவிர வி​சா​ரணை​யை தொடங்​கி​யுள்​ளனர்​.