உ.பி.யில் மதச்சடங்கு பெயரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்

உ.பி.யில் மதச்சடங்கு பெயரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்

உ.பி.யின் அலிகர் நகரைச் சேர்ந்​தவர் ஜரீனா (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது). இவருக்கு கடந்த 2015-ல் அவரது 15-வது வயதில் அம்​ரோஹா நகரை சேர்ந்த ஒரு​வருடன் நிக்​காஹ் எனும் திரு​மணம் நடை​பெற்​றது. ஜரீ​னா​வின் கணவர் அவரை 2016 மற்​றும் 2021-ல் 2 முறை முத்​தலாக் கூறி விவாகரத்து செய்​துள்​ளார். அப்​போது ஜரீனா தனது கணவரையே மீண்​டும் மணமுடிக்க நிக்​காஹ் ஹலாலா எனும் பெயரில் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாகி உள்​ளார்.

உ.பி.​யின் சில முஸ்​லிம்​கள் இடையே ‘நிக்​காஹ் ஹலாலா’ என்ற சர்ச்​சைக்​குரிய மதச்​சடங்கு கடும் எதிர்ப்​பு​களுக்கு இடையே நிலவு​கிறது. இந்த சடங்​கு, விவாகரத்​தான தம்​ப​தி​கள் மீண்​டும் திரு​மணம் செய்​து​கொள்ள கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. இதில் அப்​பெண் வேறு ஒரு ஆணை மணமுடித்து உடனடி​யாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்​டும். இதன் பிறகு அப்​பெண் தனது முதல் கணவருடன் மீண்​டும் இணைந்து வாழலாம்.

எனினும் புதிய ஆடவரால் அப்​பெண்​ணுக்கு உடனடி​யாக விவாகரத்து வழங்​கப்​ப​டா​மல் பெரும்​பாலும் அப்​பெண் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். மிக​வும் தவறான இந்த நிக்​காஹ் ஹலாலா மீது உச்ச நீதி​மன்​றத்​தில் கடந்த 2019-ல் மனு அளிக்​கப்​பட்டு இன்​னும் விசா​ரணக்கு வராமல் உள்​ளது.

இந்​நிலை​யில், ஜரீனா கடந்த டிசம்​பர் 9, 2025-ல் அம்​ரோஹா காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரில் ‘‘ஒவ்​வொரு முறை​யும் நான் யாரிடமோ ஒப்​படைக்​கப்​படு​வது போல் உணர்ந்​தேன். இதை வெளி​யில் சொல்ல மிக​வும் வெட்​கப்​பட்​ட​தால், இதை நான் யாரிட​மும் சொல்​ல​வில்​லை. என் மகளுக்​கும் அதைப் பற்றி தெரிய​வரும் என்​ப​தால் புகார் தர தாமத​மானது.

எனது கணவர், மைத்​துனர் மற்​றும் சில மவுலா​னாக்​கள் என்னை பலமுறை ஹலாலா சடங்​கிற்கு உட்​படுத்​தினர். இதற்​காக எனக்கு கொலை மிரட்​டலும் விடுத்​தனர்’’ என குற்​றம் சாட்டி இருந்​தார்.

இது தொடர்​பாக அம்​ரோஹா போலீ​ஸார், முத்​தலாக் தடை மற்றும் போக்ஸோ சட்​டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இத்​துடன் பிஎன்​எஸ் சட்​டத்​தின் கீழ் பாலியல் வன்​கொடுமை, கொலை மிரட்​டல் ஆகிய பிரிவு​களின் கீழும் வழக்​கு​கள் பதிவு செய்​துள்​ளனர். ஜரீ​னா​வின் கணவரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். மைத்​துனர்​ மற்​றும்​ சில மவுலா​னாக்​களை தேடி வரு​கின்​றனர்​.