தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்

தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்

டெல்லியில் நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டுத்தொடரில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் ஆதிஷி , சீக்கியர்களின் தெய்வமான குருதேஜ் பகதூர் குறித்து மோசமான கருத்துக்களை கூறியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வந்தனர். 

 அவரை எம்​எல்ஏ பதவி​யில் இருந்து நீக்க வேண்​டும் என்று பாஜக.​வினர் குரல் எழுப்​பினர். இதையடுத்து ஆதிஷி​யின் பேச்​சுகள் அடங்​கிய வீடியோவை தடய​வியல் ஆய்​வுக்கு அனுப்ப சபா​நாயகர் விஜயேந்​திர குப்தா உத்​தர​விட்​டார்.

அவையில் பேசிய ஆத் ஆத்மி எம்​எல்​ஏ.க்கள் அவை நடு​வில் வந்​து, “ஆதிஷி​யின் பேச்​சுகள் அடங்​கிய வீடியோவை பாஜக.​வினர் தொடர்ந்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிடு​கின்​றனர். இந்த விவ​காரத்தை தடய​வியல் ஆய்​வுக்கு சபா​நாயகர் அனுப்பி உள்​ளார். அதனால், வீடியோவை வெளி​யிடக் கூடாது என்று பாஜக.​வினருக்கு உத்​தர​விட வேண்​டும்” என்று வலி​யுறுத்​தினர்.

அதற்கு பாஜக எம்​எல்​ஏ.க்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதையடுத்து ஆம் ஆத்மிஎம்​எல்​ஏ.க்​கள் தொடர்ந்து அமளி​யில் ஈடு​பட்​டனர். இதையடுத்​து, ஆம் ஆத்மி எம்​எல்​ஏ.க்​கள் சோம் தத், ஜர்நெய்ல் சிங், சஞ்​சீவ் ஜா, குல்​தீப் குமார் ஆகிய 4 பேரை​யும் கூட்​டத்​தொடர் முழு​வதும் சஸ்​பெண்ட் செய்​வ​தாக சபாநாயகர் அறி​வித்​தார். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டது.