எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை!. ஓபிஎஸ் திட்டவட்டம்!.
நான் எந்த ஒரு தனிக்கட்சியையும் தொடங்க போவது இல்லை என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 109ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை எளிய மக்களுக்காகவும் அடிதட்டில் இருக்கின்ற தொண்டர்களுக்காகவும் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை எம்ஜிஆர் உருவாக்கினார்.
தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் தொண்டர்களுக்கான இயக்கமாக யாராலும் வெல்ல முடியாது இயக்கமாக உருவாக்கினர். தமிழகத்தில் மூன்று முறை யாராலும் அசைக்க முடியாத முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு எம்ஜிஆர் அளித்தார்.
ஜெயலலிதா அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டுகாலம் சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்கி வளர்த்தெடுத்தார் என்பதுதான் அதிமுகவின் வரலாறு.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், யாருடன் கூட்டணி என்பது இன்னும் சில தினங்களில் அறிவிப்பேன். பிரதமர் கூட்டத்திற்கான அழைப்பு வரவில்லை.. நான் எந்த ஒரு கட்சியையும் தொடங்க போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளா.
மேலும், எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி தான் அதிமுக 50 ஆண்டு காலமாக வெற்றி நடை போட்டது. தற்போது கழக சட்டவிதிக்கு ஊடு ஏற்பட்டிருக்கிறது அவர் உருவாக்கிய சட்ட விதிகளை சில திருத்தங்கள் செய்துள்ளார்கள். ஒரே ஒரு விதியை மட்டும் ரத்து செய்யவும் திருத்தம் செய்யவும் கூடாது என சட்டவிதியில் குறிப்பிட்டிருக்கிறார் அதிமுகவின் பொது செயலாளர் தலைமை பதவி தொண்டர்கள் அடிமட்ட தொண்டர்கள் விசுவாசம் மிக்க தொண்டர்களால் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் சட்ட விதி
அந்த சட்டவிதியை மட்டும் யாராலும் மாற்றம் செய்ய முடியாது இன்றைக்கு நிலைமை கழக சட்டவிதியை திருத்தம் செய்திருக்கிறார்கள் சாதாரண தொண்டன் கூட கழகப் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும் ஆனால் இன்றைக்கு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கு பத்து மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என திருத்தம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றோம் அங்கு உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு அவர்கள் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது அதன் அடிப்படையில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எங்களுடைய நியாயத்தை இந்த இயக்கம் யாருக்கு எதற்காக தொடங்கப்பட்டது எம்ஜிஆர் என்ன சொல்லி இருக்கிறார்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்ட போராட்டத்தில் உறுதியாக வெற்றி கிடைக்கும் என்றார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிச்சயமாக திமுகவை வெற்றி பெற முடியாது அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை. அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் அனைத்தும் இணைய வேண்டும். சர்வாதிகாரப் போக்கில் இணைக்க மாட்டேன் என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.
மேலும், அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும் என பாஜக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அதே நிலைப்பாட்டில் பாஜக இருக்கிறதா என்ற கேள்விக்கு, புத்திமதி சொன்னால் கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டும் இல்லையென்றால் நான் என்ன செய்வது என தெரிவித்தார்.