வங்கதேசத்துக்கு மாற்றாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து: ஐசிசி அறிவிப்பு

வங்கதேசத்துக்கு மாற்றாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து: ஐசிசி அறிவிப்பு

அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி பங்கேற்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி தொடங்​கு​கிறது. 20 அணி​கள் கலந்துகொள்​ளும் இந்​தத் தொடரில் வங்​கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம்பெற்றிருந்தது. அந்த அணியின் லீக் ஆட்​டங்​கள் கொல்​கத்​தா, மும்பை​யில் நடை​பெற இருந்தது. இந்​நிலை​யில், இந்​தி​யா​வில் தங்​களது அணிக்கு பாதுகாப்பு இருக்​காது என்​றும், இந்த தொடரில் தங்கள் அணி விளை​யாடும் போட்​டிகளை இலங்​கைக்கு மாற்ற வேண்​டும் என ஐசிசியிடம் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் கோரிக்கை வைத்தது.

ஆனால் வங்​கதேசத்​தின் குற்​றச்​சாட்டு மீது எந்தவித உண்​மை​யும் இல்​லை. வங்​கதேச அணிக்கு இந்​தி​யா​வில் எந்​த​வித பாது​காப்பு அச்சுறுத்​தலும் இல்லை என ஐசிசி தெரி​வித்​தது. போட்டி தொடங்​கு​வதற்கு சில வாரங்​களே உள்​ள​தால் அட்டவணை, பயண விவரங்​களை மாற்ற முடி​யாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

மேலும், வங்கதேச அணியின் இடமாற்ற கோரிக்கையை பரிசீலிக்க ஓட்டெடுப்பும் நடத்தப்பட்டது. அதில் வங்கதேச அணியின் கோரிக்கைக்கு 16 ஐசிசி உறுப்பினர்களில் 14 நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காலக்கெடு விதித்தது ஐசிசி. இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணிக்காது என வங்கதேச அரசு தெரிவித்தது.

இதையடுத்து இந்த தொடரில் வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் இப்போது ‘சி’ பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், நேபாளம், இங்கிலாந்து, இத்தாலி அணிகளுடன் ஸ்காட்லாந்து அணி பங்கேற்று விளையாட உள்ளது. ஐசிசியின் இந்த நகர்வுக்கு கலவையான விமர்சனங்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளன.