உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு

உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு

சுதேசி தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறார்.

அதன்​படி தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், ‘‘அலு​வலக பயன்​பாட்​டுக்​காக உள்​நாட்டு மென்​பொருள் சேவை தளமான ஜோஹோவுக்கு மாறி​விட்​டேன்’’ என்று அறி​வித்​தார். இதன் தொடர்ச்​சி​யாக ஜோஹோ நிறு​வனத்​தின் அரட்டை செயலியை​யும் அவர் பதி​விறக்​கம் செய்து பயன்​படுத்தி வரு​கிறார்.

அடுத்த கட்​ட​மாக உள்​நாட்​டில் உரு​வாக்​கப்​பட்ட பயண வழி​காட்டி செயலி​யான மேப்​பில்ஸை அவர் பயன்​படுத்த தொடங்கி உள்​ளார். இந்த செயலியை இந்​தி​யர்​கள் அனை​வரும் பயன்​படுத்​த​வும் அவர் வேண்​டு​கோள் விடுத்​திருக்​கிறார். மேப்​பில்ஸ் செயலியை பயன்​படுத்தி அவர் காரில் பயணம் மேற்​கொண்ட வீடியோவை சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்டு உள்​ளார். மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவுக்கு மேப் மை இந்​தியா நிறு​வனம் நன்​றி தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​வில் பணி​யாற்​றிய ராகேஷ், ராஷ்மி தம்​ப​தி​யர் இந்​தி​யா​வுக்கு திரும்பி சிஇ இன்போ சிஸ்​டம்ஸ் லிமிடெட் என்ற நிறு​வனத்தை தொடங்​கினர். பின்​னர் இந்த நிறு​வனம் மேப் மை இந்​தியா என்று பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது.நாடு முழு​வதும் சிறிய தெரு​வை​கூட விடா​மல் ஆய்வு செய்து டிஜிட்​டல் வரைபடத்தை ராகேஷ், ராஷ்மி தம்​ப​தி​யர் உரு​வாக்​கினர்.