பிஎல்ஓ.களுக்கு அழுத்தமில்லை: கேரள தேர்தல் அதிகாரி தகவல்
கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (பிஎல்ஓ) இலக்குகள் தருவது அவர்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. மாறாக எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதே ஆகும். பிஎல்ஓ.க்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.