ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்

ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்

பாஜக ஆளும் உத்​தரபிரதேச அரசு செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) தொழில்​நுட்ப உதவி​யால், ஸ்மார்ட் சுற்​றுலா மற்​றும் டிஜிட்​டல் நிர்​வாகத்​துக்​கான முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இதில் மாநிலத்​தின் முக்​கியப் புனிதத் தலங்​களான வாராணசி​யின் காசி விஸ்​வ​நாதர் கோயில், அயோத்தி ராமர் கோயில், கோரக்​பூரின் கோரக்​நாத் கோயில் ஆகிய​வற்​றுக்கு முதல்​கட்​ட​மாக ஏ.ஐ. அடிப்​படை​யில் பாது​காப்​புக்​கான கண்​காணிப்பு அறி​முகப்​படுத்​தப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் கூறும்​போது, “நம்​பிக்கை மற்​றும் பாரம்​பரி​யத்தை பாது​காக்​கும் அதே வேளை​யில் கோயில் நிர்​வாகத்தை நவீனமய​மாக்​கு​வ​தி​லும் எங்​கள் அரசு இறங்​கி​யுள்​ளது. இந்த திட்​டத்​தின் கீழ் ஏ.ஐ. கேம​ராக்​கள் மூலம் கோயில்​களின் அன்​றாட நடவடிக்கை கண்​காணிக்​கப்​படு​கிறது.

பக்​தர்​களின் கூட்ட நெரிசலை ஆய்வு செய்து பாது​காப்பு அளிக்​க​வும் கோயில்​களை தூய்​மை​யாக பராமரித்து பணி​யாளர்​களை திறம்பட நிர்​வகிக்​க​வும் இது உதவு​கிறது. நாட்​டில் ஸ்மார்ட் சுற்​றுலா​வுக்கு உ.பி.யை முன்​மா​திரி மாநில​மாக மாற்​று​வதே எங்​கள் குறிக்​கோள்” என்​றார்.

தற்​போது சர்​வ​தேச நாடு​களால் அனைத்து வகை பயன்​பாட்​டுக்​கும் ஏ.ஐ. தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படு​கிறது. இதனை கோயில்​களில் முதன்​முறை​யாக உ.பி. அரசு பயன்​படுத்​துகிறது. இதன் மூலம் பக்​தர்​கள் அதிக பலன் அடை​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும் தீவிர​வாதம் உள்​ளிட்ட தாக்​குதல்​களில் இருந்​தும் கோயில்​களுக்கு முழு பாது​காப்​பும் கிடைக்​கும் எனக் கருதப்​படு​கிறது.