டெல்லியில் டிச.10-ல் தொடங்குகிறது இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை!

டெல்லியில் டிச.10-ல் தொடங்குகிறது இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை!

இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை வரும் 10-ம் தேதி டெல்லியில் தொடங்க இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரிக் ஸ்விட்சர் தலைமையிலான குழு இந்தியா வர உள்ளது. இக்குழு, இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமையிலான குழுவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை புதுடெல்லியில் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும்.

நவ. 28ம் தேதி FICCI-ன் ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராஜேஷ் அகர்வால், உலகலாவிய வர்த்தக நிலைமைகளில் மாற்றங்கள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தைகள் கணிசமாக முன்னேறியுள்ளன. இந்த காலண்டர் ஆண்டுக்குள் ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று நாங்கள் மிகுந்த விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியையும் 25% ஆக உயர்த்துவதாக அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்காக கூடுதலாக இந்தியாவுக்கு 25% வரியை ட்ரம்ப் விதித்தார். இதன்மூலம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை விதிக்கிறது.

அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 191 பில்லியன் டாலராக உள்ளது. இதை வரும் 2030-க்குள் 500 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.