குறையாத தேங்காய் விலை... இல்லத்தரசிகள் கவலை

குறையாத தேங்காய் விலை... இல்லத்தரசிகள் கவலை

தேங்காய் விலை அதிகரித்து பல மாதங்களாகியும் குறையாதது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

5 மாதங்களுக்கு முன்பு வரத்து குறைந்ததாலும், போதிய விளைச்சல் இல்லாததாலும் தேங்காய் விலை கிலோ ரூ.100-க்கும் மேல் அதிகரித்தது. இதனால் வாரத்திற்கு 3 தேங்காய்கள் வரை சமையலுக்கு வாங்கி வந்த இல்லதரிசகள், 1ஆக குறைத்துக் கொண்டனர்.

தேங்காய் சுக்குநூறாக உடைந்தால் என்னவாகும் தெரியுமா? – Oruvan.com

சட்னி, சாம்பார் போன்றவற்றுக்கு தேங்காயை அதிகம் பயன்படுத்தாமல் குறைத்து சமாளித்து வந்தனர். விலை குறைந்து நிலைமை சரியாகும் என அவர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் இன்னும் தேங்காய் விலை குறையவில்லை. சென்னையில் மொத்த விலையில் 1 கிலோ தேங்காய் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது. சில்லரை விலையில் 1 கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் இல்லத்தரசிகள் மிகவும் கவலையில் உள்ளனர். தேங்காய் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.