இணை தயாரிப்பாளரை அடுத்து போதைப் பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது

இணை தயாரிப்பாளரை அடுத்து போதைப் பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது

 ​போதைப் பொருள் வழக்​கில் இணை தயாரிப்​பாளர் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், அவர் கொடுத்த தகவலின்​பேரில் சினிமா தயாரிப்பாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். போதைப் பொருட்​கள் விற்​பனை, கடத்​தல் மற்​றும் பதுக்​கலுக்கு எதி​ரான நடவடிக்​கையை சென்னை போலீ​ஸார் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

இதன் தொடர்ச்​சி​யாக திரு​மங்​கலம் போலீ​ஸாருடன் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார் கடந்த 19-ம் தேதி திரு​மங்​கலம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கண்​காணித்​தனர்.

இதனையடுத்து அந்த போதை ஸ்டாம்ப்​களை​யும் 2 செல்​போன்​களை​யும் போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில் கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் தேனாம்​பேட்​டையை சேர்ந்த சினிமா இணை தயாரிப்​பாளர் முகமது மஸ்​தான் சர்​புதீன் (44), முகப்​பேரைச் சேர்ந்த சீனி​வாசன் (25), வளசர​வாக்​கத்​தைச் சேர்ந்த சரத் (30) ஆகிய 3 பேரைக் கைது செய்​தனர்.

அவரை காவலில் எடுத்து விசா​ரித்​த​தில் கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் சினிமா தயாரிப்​பாள​ரும், விநி​யோகஸ்​தரு​மான நுங்​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தினேஷ் ராஜ் (39) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

மேலும் இவர்​கள் வேறு ஏதேனும் பார்ட்​டிகளுக்கோ சினிமா பிர​முகர்​களுக்கோ போதைப் பொருள் விற்​பனை செய்​தார்​களா? எனவும் தொடர்ந்து விசா​ரிக்​கப்​பட்டு வருகிறது.