புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

 இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகை வந்த புதினை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக புதினுடன் வருகை தந்துள்ள அந்நாட்டின் தூதுக்குழுவினரை புதின், திரவுபதி முர்முவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கைகளை குலுக்கி, திரவுபதி முர்மு வரவேற்றார்.

கடந்த 2000-ம் ஆண்​டில் முதலா​வது இந்​திய, ரஷ்ய வரு​டாந்திர உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெற்​றது. இந்த வரிசை​யில் 22-வது உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஜூலை​யில் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நடைபெற்றது.