பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு

பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு

தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு. தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பின் 238-வது மத்​திய அறங்​காவலர்​கள் குழு கூட்​டம் மத்​திய தொழிலா​ளர் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறை​களை எளி​தாக்க ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. அதன்​படி, மருத்​துவம், கல்​வி, திரு​மணம், வீடு மற்​றும் சிறப்பு சூழ்​நிலைகள் என அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​கள் பிஎப் பணத்​தில் 100 சதவீதத்​தை​யும் திரும்ப பெறலாம். இது 7 கோடிக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் தங்​கள் ஓய்​வூ​தி​யத்​தைப் பாது​காப்​ப​தோடு, தங்​கள் சேமிப்பை எளி​தாக அணுக​வும் முடி​யும்.

முன்​ன​தாக பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்கு 13 வகை​யான விதி​முறை​களை வைத்​திருந்​தது. தற்​போது அவை எல்​லாம் ஒருங்​கிணைக்​கப்​பட்டு ஒரே ஒரு பிரி​வின் கீழ் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறையை அறி​வித்​துள்​ளது. இது தொழிலா​ளர்​கள் எளி​தாக புரிந்து கொள்​ள​வும், பணத்தை எளி​தாக திரும்பப் பெற​வும் வழி​வகுக்​கும். திரு​மணம், கல்வி செல​வுக்கு 3 முறை மட்​டுமே பிஎப் சேமிப்​பில் இருந்து பணத்தைப் பெற முடி​யும். தற்​போது, கல்விக்கு 10 முறை வரை​யிலும், திரு​மணத்​துக்கு 5 முறை வரை​யிலும் பணம் எடுக்க முடி​யும்.

இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​களு​டைய சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து தகு​திக்​கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடி​யும். மேலும், பிஎப் சேமிப்​பில் இருந்து சிறிதளவு பணம் எடுப்​ப​தற்​கான குறைந்​த​பட்ச பணிக் காலம் 12 மாதங்​களாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், சிறப்பு சூழ்​நிலைகளின் கீழ் பணத்தை திரும்பப் பெற, காரணங்​களை தெரிவிக்க வேண்​டிய​தில்​லை.