ரூ.400 கோடி திருடியதாக தொழிலதிபர் கடத்தல்: நாசிக்கில் 6 பேர் கைது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த சையத் அசார் உள்ளிட்ட 6 பேர், தங்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.400 கோடி மதிப்பிலான கண்டெய்னர் இருப்பதாகவும், அதை வைத்துக் கொண்டு பணம் அதிகம் ஈட்ட முடியும் என்று கட்டிட தொழிலதிபர் சந்தீப் பாட்டீல் என்பவரிடம் தெரிவித்தனர்.
அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்ட 6 பேரும், ரூ.400 கோடி மதிப்பிலான கண்டெய்னரை திருடியதாக கூறி பாட்டீலை கடத்திச் சென்று அடித்து உதைத்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் 6 பேரையும் நாசிக் போலீஸார் கைது செய்துள்ளனர்.