ஓய்வை அறிவித்தார் பாடகர் அரிஜித் சிங் - ரசிகர்கள் அதிர்ச்சி!

ஓய்வை அறிவித்தார் பாடகர் அரிஜித் சிங் - ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலிவுட்டின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் அரிஜித் சிங், இசைத் துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலங்களில் புதிய திரைப்படப் பாடல்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பாடகர்கள் பிரபலமாக இருப்பார்கள். முஹம்மது ரஃபி, கிஷோர் குமார், முகேஷ், உதித் நாராயணன், குமார் சானு ஆகியோரின் வரிசையில் தாராளமாக அரிஜித் சிங்கை சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த தலைமுறையை தன் வசீகரக் குரலால் கட்டிப் போட்டவர். அரிஜித் சிங் பாடினால் அந்த பாடல் சூப்பர்ஹிட் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

அரிஜித் சிங்கின் இந்தத் திடீர் முடிவு பாலிவுட் இசையமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் முழுக்க பலரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பழைய பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பாரா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.