428 காலாவதி சட்டங்களை நீக்க பேரவையில் மசோதா தாக்கல்

428 காலாவதி சட்டங்களை நீக்க பேரவையில் மசோதா தாக்கல்

தமிழகத்​தில் காலா​வ​தி​யான, தேவையற்ற 428 சட்​டங்​களை நீக்​கு​வதற்​கான மசோ​தாவை பேர​வை​யில் அமைச்​சர் எ.வ.வேலு தாக்​கல் செய்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, 2 மசோ​தாக்​களை அமைச்​சர் எ.வ.வேலு தாக்​கல் செய்​தார். ‘தமிழகத்​தில் காலா​வ​தி​யான, தேவையற்ற சட்​டங்​கள் மற்​றும் திருத்​தச் சட்​டங்​களை நீக்​கு​மாறு தமிழ்​நாடு மாநில சட்ட ஆணை​யம் பரிந்​துரை செய்​துள்​ளது.

இதுகுறித்து சம்​பந்​தப்​பட்ட துறை​களு​டன் கலந்​துபேசி, பழமை​யான, வழக்​கத்​தில் இல்​லாத சட்​டங்​களை நீக்​கு​வதற்கு அரசு முடி​வெடுத்​துள்​ளது’ என்று மசோ​தாவுக்​கான நோக்க காரண உரை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

அந்த வகை​யில், தமிழ்​நாடு கிராம நீதி​மன்​றங்​கள் சட்​டம்​-1888, தமிழ்​நாடு துறை​முகப் பொறுப்பு கழகம் திருத்​தச் சட்​டம்​-1919, தமிழ்​நாடு கால்​நடை மேம்​பாட்​டுச் சட்​டம்​-1940 உள்​ளிட்ட 428 சட்​டங்​கள், திருத்​தச் சட்​டங்​களை நீக்​கு​வதற்​கான மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. பேர​வைக் கூட்​டம் நிறைவடை​யும் நாளில் இந்தமசோ​தாக்​கள் ஆய்வு செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட உள்​ளன. இவ்வாறு குறிப்பிட்டார்.