இன்று முதல் அமர்நாத் பனிலிங்க தரிசனம் ஆரம்பம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் பனிலிங்க குகை, இன்று முதல் பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று அதிகாலை ஜம்மு முகாமிலிருந்து புறப்பட்ட யாத்திரை குழுவை, ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். நேற்று மாலை உதம்பூர் மாவட்டம், திக்ரி பகுதியில் உள்ள காளி கோயிலுக்கு பக்தர்கள் வந்து சேர்ந்ததும், அவர்களை மாவட்ட நிர்வாகத்தினரும் உள்ளூர் மக்களும் வரவேற்றனர்.
அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, உதம்பூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் டுள்ளன. யாத்திரை வரும் பக்தர்களின் உணவு ஏற்பாடுக்காக, ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 22 இடங்களில் விருந்தோம்பல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.