உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணிக்கு அபராதம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
13-வது மகளிர் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை வென்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின்போது பந்துவீச இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு ஓவர் பந்துவீச தாமதமானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.