டாஸ்மாக், கூட்டுறவு பணியாளர்களுக்கு 20% போனஸ்!

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர் களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும்.
அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்க பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும்.
போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகரலாபம் ஈட்டும் சங்கங்களின் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராதநிகர லாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரிவோருக்கு ரூ.3000, தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400-ம் கருணை தொகையாக வழங்கப்படும்.