ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்குமா? சென்னை ஹைகோர்ட்டில் நாளை காலை விசாரணை
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது. மேலும் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு பட தயாரிப்பு நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி பொங்கல் ரீலிசாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காததால் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. " சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று சென்சார் வாரியம் கூறியதால் சென்சார் சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜனநாயகன் பட நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜனநாயகன் படத்திற்கு உடனே யுஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், டிவிஷன் பெஞ்சில் சிபிஎப்சி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. சிபிஎப்சியின் முறையீட்டை உடனடியாக ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீத்பதி ஸ்ரீவத்ஸ்வா, அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்ததோடு, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர். நாளை காலை 11.30 மணிக்கு விசாரணை இதற்கிடையே, பட நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு பட தயாரிப்பு நிறுவனத்தை அறிவுறுத்தியது. இந்த நிலையில், தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. தலைமை நீதிபதி எம். ஸ்ரீவத்ஸ்வா, அருள் முருகன் அமர்வு முன்பு வழக்கு பட்டியலிடப்படுள்ளது. நாளை காலை 11.30 மணியளவில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று அளிப்பது தொடர்பாக உத்தரவு எதுவும் வருமா?எ ன்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.