மாதம் ரூ.21,000 சம்பளம்... உடனே விண்ணப்பிங்க
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் தற்காலிக காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் குழந்தை உதவி மையத்தின் மேற்பார்வையாளர் 3 பணியிடம் மற்றும் வழக்குப்பணியாளர் 3 பணியிடம் ஆகிய பணியிடங்களை ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்பார்வையாளர் 3 பணியிடங்களுக்கு 01.12.2025 படி 42 அல்லது 42 வயது வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வி தகுதியாக சமூகப்பணி, கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், சமுதாய சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட இளங்கலைப்பட்டம் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் கணினி அறிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும். அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். மாத தொகுப்பூதியம் 21,000 வழங்கப்படும். வழக்குப்பதிவாளர் 3 பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அதற்கு GLOEDITOOT மையத்திலிருந்து 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்பான தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.மாத தொகுப்பூதியம் 18,000 வழங்கப்படும்.
இந்த ஒப்பந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஒருவருடம் வரை நடப்பில் இருக்கும். மாத தொகுப்பூதியம் தவிர வேறு எந்த படியும் பெற தகுதியில்லை. அரசிடமிருந்து ஆணை கிடைக்கப் பெற்ற பின்னரே தொகுப்பூதியம் வழங்கப்படும். ஒரு மாத பணி நாட்கள் முடிவுற்ற பின்னர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியாளர், அரசுப்பணி என உரிமை கோர தகுதியில்லை.
இந்த ஒப்பந்தமானது எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம். இதற்கான விண்ணப்படிவத்தை https://tirunelveli.nic.in என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து 23.12.2025 அன்றுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
குறித்த தேதிக்கு பின்னர் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அலுவலக முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி -9. மேலும் தகவலுக்கு 0462-2901953 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.