சமூக வலைதளம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர், உ.பி. முதல்வருக்கு மிரட்டல்
சமூக வலைதளம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர், உ.பி. முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ள நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பாண்டேஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் ஆவடி ஸ்டாலின். இவர், தமிழ்நாடு இந்து சேவா சங் மாநில தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஆவடி ஸ்டாலின், சமூக வலைதளம் மூலம் தனக்கும், மத்திய உள்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதல்வருக்கும், ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறி, நேற்று ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தார்.
உங்களை நேரில் வந்து ஜிகாத் செய்வேன்’ என கூறினார். ஆகவே,இந்த நபர் மீது காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்