ரூ.47 கோடி கொகைன் கடத்திய பெண் உட்பட 5 பேர் கைது

ரூ.47 கோடி கொகைன் கடத்திய பெண் உட்பட 5 பேர் கைது

கொழும்​பிலிருந்து மும்​பைக்கு விமானத்​தில் கடத்தி வந்த ரூ.47 கோடி கொகைன் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பெண் பயணி உட்பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து மத்​திய நிதி அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​:

இலங்கை தலைநகர் கொழும்​பிலிருந்து மும்​பைக்கு வரும் விமானத்​தில் கொகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, வரு​வாய் புல​னாய்​வுத் துறை (டிஆர்ஐ) அதி​காரி​கள், மும்​பை​யின் சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்த ஒரு பெண் பயணி​யின் உடமை​களை பரிசோ​தித்​தனர். அப்​போது 9 காபி பொடி பாக்​கெட்​களில் மறைத்து வைத்​திருந்த கொகைன் போதைப் பொருளை பறி​முதல் செய்​தனர். 4.7 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.47 கோடி ஆகும்.

கொகைன் கடத்தி வந்த பெண், அதை வாங்​கிச் செல்ல வந்த ஒரு​வர் உட்பட 5 பேரை டிஆர்ஐ அதி​காரி​கள் கைது செய்​துள்​ளனர். அவர்​கள் மீது போதைப்​பொருள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. சர்​வ​தேச போதை கடத்​தல் கும்​பல், சமீப கால​மாக போதைப்​பொருளை கடத்த இந்​திய பெண்​களை பயன்​படுத்தி வரு​கின்​றனர். குறிப்​பாக, இதைக் கண்​டறிவதைத் தடுக்க உணவுப் பொருட்​களுக்​குள் வைத்​து கடத்​துகின்​றனர். இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.