இந்த நிறுவனம் தொடங்கும் போதே லாபமும் கிடையாது, லாபத்தை பிரித்தும் கொடுக்கவில்லை எவருக்கும் சம்பளமும் கொடுக்கப்படவில்லை, அதன்படி பார்த்தால் பணம் பரிமாற்றம் இருந்தால் தானே சட்டப் பணப் பரிமாற்றம் என்று கூற முடியும்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது தொடர்ந்து பழி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது எங்களுடைய கருத்தாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தாலும் சொத்துகளை முடக்க முடியாது. ஒன் இந்தியா என்பது ஒரு பங்குதாரர். அதற்கு சொத்து கிடையாது. அதை யாராலும் வாங்கவும் விற்கவும் முடியாது எனவும் அவர் கூறினார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெயர் மாற்றம் குறித்து பேசுகையில், இத்திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை "மகாத்மா காந்தியின் இரண்டாவது கொலை" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் புதிய சட்டத்தில் இத்திட்டத்தின் பெயர் விபி ஜிராம்ஜி என மாற்றப்பட்டுள்ளதாகவும், இது வாயில் நுழையாத பெயராக இருக்கிறது எனவும் ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் புரியாது, ஹிந்தி தெரிந்தவர்களுக்கும் புரியாது எனவும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து புதிய சட்டத்தின்படி, இத்திட்டம் இனி நாடு முழுவதும் அமலாகாது என்றும், மத்திய அரசு குறிப்பிடும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே தரும். அதற்கு மேல் ஆகும் செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
முன்பு 'வேலை கேட்டால் கொடுக்க வேண்டும்' என்று இருந்தது. இப்போது 'வேலை கொடுத்தால் மட்டுமே கேட்க முடியும்' எனமாற்றப்பட்டுள்ளது.
பழைய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை திட்டம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். உத்தரவாதம் இருந்தது. ஊதியம் வழங்க அனைத்து நிதியையும் மத்திய அரசு பொறுப்பெடுத்து செயல்பட்டது. மாநில அரசின் பங்களிப்பு என்பது 25% ஆகும். வேலை கேட்டு வேலை மறுக்கப்படும் பட்சத்தில் பயணப்படி வழங்கப்பட்டுள்ளது. 95 சதவீதம் பெண்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது.
2004, 2005 பட்ஜெட்டில் அறிவித்தபோது அதற்குப் பின்னாடி 8, 6 மாத காலங்கள் நீண்ட நெடிய கலந்து ஆலோசனை செய்த பின்னரே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் ஏக மனதாக ஏற்கப்பட்டது. பாஜகவால் எதிர்க்க முடியவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக வாஜ்பாய் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு இந்தத் திட்டத்தை ஆதரித்தனர்.
தற்போது நிதி ஆதாரத்தை மாநில அரசுகளின் பொறுப்பிற்குத் தள்ளுவதால், பாதுகாப்பு வலையையே எடுத்துவிட்டார்கள். 12 கோடி மக்கள் இத்திட்டத்தை நம்பி இருக்கிறார்கள். வருடத்தில் 60 நாட்கள் இந்த திட்டத்தை அமலாக்க முடியாது. அதாவது விவசாயப் பருவகாலங்களில் இந்த திட்டத்தை அமலாக்க முடியாது எனவும் இந்த புதிய சட்டத்தில் பல கோடிகள் குறைபாடு உள்ளது. மேலும் இந்த சட்டம் உத்தரவாதம் இல்லாத ஒன்று. நல்ல வேளை இந்த திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயர் வைக்க விரும்பவில்லை. அன்றாடக் கூலி கிடைக்காவிட்டால் ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரியாது எனவும் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மோசடியை வீடு வீடாகச் சென்று அம்பலப்படுத்துவோம்; சட்டம் ரத்தாகும் வரை காங்கிரஸ் போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.
2015-லேயே மோடி இத்திட்டத்தை தோல்வியின் சின்னம் என்று எள்ளி நகையாடினார், இப்போது அதை சிதைக்கிறார் மேலும் காந்தி மற்றும் நேருவின் பெயரை இந்திய வரலாற்றில் இருந்தும் மக்களின் ஆழ்மனதில் இருந்தும் யாராலும் நீக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் 66 லட்சம் பேர் நீக்கப்பட்டதை அதிமுக ஆதரிப்பது வியப்பளிக்கிறது என்றும் அதிமுகவிற்கு பாஜக தான் முதலாளி எனவே முதலாளி சொல்கிறதே தான் அவர்கள் செய்வார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
கொரோனா காலங்களில் உலக நாடுகளில் பிரதமர் மோடியின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, மும்பை, பெங்களூர் தமிழ்நாடு போன்ற நகரங்களில் இருந்து கோடி கணக்கான மக்கள் நடந்தே சென்றார்கள், ரயில் கிடையாது, பேருந்து கிடையாது பட்டினியோடு நடந்தே சென்றார்கள். நடந்து செல்லும் போதே பல பேர் இறந்ததையும் நாம் பார்த்தோம் என்று அவர் கடுமையான விமர்சனத்தை வைத்தார்.