பிப்ரவரியில் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி; தொடங்கி வைக்க இருக்கும் திட்டங்கள்?

பிப்ரவரியில் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி; தொடங்கி வைக்க இருக்கும் திட்டங்கள்?
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் பரப்புரையை நிகழ்த்தினார்.
அதில் அதிமுக, பாமக அன்புமணி தரப்பு, அமமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில், தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்.
இதற்காக மேற்கு மண்டலத்தை முன்னிலைப்படுத்தி பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாம் கட்ட பரப்புரைக்காக, பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.