வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் - தலிபான்களுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கையா?

வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் - தலிபான்களுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கையா?

ஆப்​கானிஸ்​தான் தலி​பான்​களு​டன் தொடர்பு வைத்​திருப்​ப​தாகக் கருதப்​படும் டிடிபி, பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ராக செயல்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், மீண்​டும் டிடிபி அமைப்​பினர் மீது ராணுவம் தாக்​குதல் நடத்​தப்​போவ​தாக​வும், ஜனவரி 23-க்​குள் திரா பகு​தியை விட்டு வெளி​யேறு​மாறும் மசூதி ஒலிபெருக்​கி​கள் மூலம் ஒரு மாதம் முன்பே அறி​விப்பு வெளி​யிடப்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா முகமது ஆசிப் கூறும்​போது, “திரா நகரில் எந்த ராணுவ நடவடிக்​கை​யும் எடுக்​கப் போவ​தில்​லை. மாறாக அங்கு நில​வும் கடும் குளிரே மக்களின் இடப்​பெயர்ச்​சிக்​குக் காரணம்” என்​றார்.