இப்​போது​வரை எனக்கு இசை தெரியாது: இளையராஜா

இப்​போது​வரை எனக்கு இசை தெரியாது: இளையராஜா

அஜந்​தா-எல்​லோரா சர்​வ​தேச திரைப்பட விழா, மகா​ராஷ்டிரா மாநிலம் சத்​ரபதி சம்​பாஜிநகரில் நடந்து வருகிறது. பிப் 4-ம் தேதி வரை நடை​பெறும் இவ்​விழா​வில் இசை அமைப்​பாளர் இளையராஜாவுக்கு வாழ்​நாள் சாதனை​யாள​ருக்​கான பத்​ம​பாணி விருது நேற்று வழங்கப்​பட்​டது.

விருதுபெற்ற பின் பேசிய இளை​ய​ராஜா, “இந்த விழாவுக்கு வரு​வதற்கு முன்பு எனது 1,541-வது படத்​தின் பின்​னணி இசையை முடித்​து​விட்டு வந்​தேன். என்​னிடம் பலர் எப்​படி பாடல்​களை உரு​வாக்​கு​கிறீர்​கள் எனக் கேட்​கிறார்​கள். அவர்​களிடம், இப்​போது​வரை எனக்கு இசை தெரி​யாது என்று சொல்​கிறேன்.

அதனால்​தான் இன்​னும் வேலை செய்து கொண்​டிருக்​கிறேன். இசை பற்றி எல்​லாம் தெரிந்​திருந்​தால், நான் அதில் தேர்ச்சி பெற்​றுவிட்​டேன் என நினைத்து வீட்​டிலேயே இருந்​திருப்​பேன். நான் என்னை வாழ்​நாள் முழு​வதும் இசை மாணவ​னாகக் கருதுகிறேன். நான் நவீன தொழில் நுட்​பங்​களை நம்​பி​யிருக்​க​வில்​லை” என்று தெரி​வித்​தார்.