ஜவுளி நிறுவனங்கள் இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 சதவீத மூலதன முதலீட்டு மானியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஜவுளி நிறுவனங்கள் இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 சதவீத மூலதன முதலீட்டு மானியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 ‘அ​திநவீன நெசவு, பின்​னலாடை இயந்​திரங்​களைக் கொள்​முதல் செய்ய ஜவுளி நிறு​வனங்​களுக்கு 20 சதவீதம் மூலதன முதலீட்டு மானி​யம் வழங்​கப்​படும்’ என முதல்​வர் ஸ்​டா​லின் தெரி​வித்தார். கோவை கொடிசி​யா​வில் 2 நாட்​கள் நடை​பெறும் சர்​வ​தேச அளவி​லான முதலா​வது ஜவுளித்தொழில் மாநாட்​டை, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்  தொடங்கி வைத்​தார்.

திருத்​தப்​பட்ட ஒருங்​கிணைந்த ஜவுளிக் கொள்​கையை வெளி​யிட்டு அவர் பேசி​ய​தாவது: கோவை, திருப்​பூர், கரூர், சேலம், ஈரோடு, சென்னை ஆகிய மாவட்​டங்​கள், நாட்​டின் ஜவுளித்துறை மைய​மாக விளங்​கு​கின்​றன.

மதுரை, திண்​டுக்​கல், விருதுநகர் மாவட்​டங்​கள் இன்​றைக்கு வளர்ந்து வரு​கின்​றன. 30 லட்​சம் பேருக்கு ஜவுளித்துறை மூலம் வேலை​வாய்ப்பு கிடைக்​கிறது. நாடு முழு​வதும் ஜவுளித்துறையில் பணி​யாற்​றும் பெண்​களில் 40 சதவீதத்​துக்​கும் அதி​க​மானோர், தமிழ்​நாட்டை சேர்ந்​தவர்​கள்.

ஜவுளித்​துறைக்கு தமிழ்​நாடு அரசின் ஆதரவு எப்​போதும் இருக்​கும். 6 சதவீத மானி​யத்தை தமிழ்​நாடு அரசு மறு​பரிசீலனை செய்து உயர்த்​தும். இவ்​வாறு அவர் பேசி​னார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி மூலம் வாழ்த்​தி பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் 2-வது மிகப்​பெரிய பொருளா​தா​ரம் கொண்ட மாநிலம் தமிழ்​நாடு.

திரா​விட மாடல் ஆட்​சி​யில் ஆட்​டோமொபைல், ஐடி, காலணி உற்​பத்​தி, மின்​னணு பொருட்​கள் உள்​ளிட்ட பல துறை​களி​லும் தமிழ்​நாடு முன்​னணி​யில் இருக்​கிறது. இந்​தி​யா​வின் ஜவுளி ஏற்​றும​தி​யில் தமிழ்​நாட்​டின் பங்கு மட்​டும் 33 சதவீதம். நேரடி​யாக 31 லட்​சம் தொழிலா​ளர்​களுக்கு தமிழ்​நாட்​டின் ஜவுளித்துறை வேலை​வாய்ப்பு வழங்​கு​கிறது. இதில் 60.12 சதவீதம் பெண் தொழிலா​ளர்​கள் என்​பது கூடு​தல் சிறப்​பு.

ஜவுளித் தொழிலுக்​கான கண்​காட்​சி, வாங்​கு​வோர் விற்​போர் சந்​திப்​பு, கருத்​தரங்​கு​கள், விருதுநகரில் அமைய உள்ள பி.எம்​.மித்ரா ரோட் ஷோ, கோவை, மதுரை மற்​றும் தூத்​துக்​குடி​யில் நடை​பெற்ற முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் ஜவுளித்தொழிலுக்கு மட்​டும் ரூ.9,764 கோடி முதலீடு​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்​டுள்​ளன.

இந்த மாநாட்​டில் ரூ.912.97 கோடி முதலீடு​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்​டுள்​ளன. தமிழ்​நாட்​டின் ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக்கொள்கை 2025-26 இந்த மாநாட்​டில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. பல்​வேறு தரப்​பினரின் கோரிக்கை ஏற்​று, ஜவுளி நிறு​வனங்​களுக்கு அதிநவீன நெசவு, பின்​னலாடை இயந்​திரங்​களைக் கொள்​முதல் செய்ய 20 சதவீதம் மூலதன முதலீட்டு மானி​யம் வழங்​கப்​படும். இதற்​காக ஆண்​டு​தோறும் ரூ.30 கோடி அரசு நிதி ஒதுக்​கீடு செய்​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மாநாட்​டில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் முன்​னிலை​யில் ரூ.912.97 கோடி மதிப்​பிலான 55 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள், கைத்​தறி மற்​றும் துணிநூல் துறை​யுடன் கையெழுத்​தாகின. இதன்​மூலம் 13,080 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

இந்​நிகழ்ச்​சி​யில் சிறந்த ஏற்​றும​திக்​காக முதலிடம் பெற்ற 5 நிறு​வனங்​களுக்கு தலா ரூ.2 லட்​சம் பரிசுத்​தொகை, தமிழ்​நாடு புதிய ஒருங்​கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019-ல் அறிவிக்​கப்​பட்​டபடி, 15 ஆண்​டு​கால பழைய நூற்பு இயந்​திரங்​களை நவீனப்​படுத்த ரூ.11.70 லட்​சம் வட்டி மானி​யம், விசைத்​தறிகளை நவீனப்​படுத்த விசைத்​தறி​யாளர்​களுக்கு ரூ.67.49 லட்​சம் மானி​யம் உட்பட பல்​வேறு திட்​டங்​களுக்​கான ஆணையை துணை முதல்வர் வழங்​கி​னார்.

கைத்​தறி மற்​றும் துணிநூல் துறை அமைச்​சர் ஆர்​.​காந்​தி, செந்​தில் பாலாஜி எம்​எல்ஏ, மாநக​ராட்சி மேயர் கா.ரங்​க​நாயகி ராமச்​சந்​திரன், கைத்​தறி, துணிநூல் கதர் துறை செயலர் வே.அ​முதவல்​லி, துணிநூல் துறை ஆணை​யர் இரா.லலி​தா, மாவட்ட ஆட்​சி​யர் பவன்​கு​மார் கிரியப்​பனவர், ஏஇபிசி தேசிய தலை​வர் ஆ.சக்​திவேல், தென்​னிந்​திய நூற்​பாலைகள் சங்​கத்​தின் துரை பழனிச்​சாமி உட்பட பலர் பங்​கேற்​றனர்.