200 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொலிவு... திணறும் மாஸ்கோ

200 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொலிவு... திணறும் மாஸ்கோ
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் 200 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொலிவு ஏற்பட்டு உள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மாஸ்கோவில் கடந்த ஒரு வாரமாக பனி கொட்டுகிறது. 92 மில்லி மீட்டர் பனி பொலிவு பதிவாகி உள்ளது. இது 203 ஆண்டுகளில் இல்லாத உச்சம் ஆகும்.
இதனால் தெருக்கள், சாலைகளில் பனி கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. வீடுகள், கட்டிடங்கள் மீதும் பனி கட்டிகள் கிடக்கின்றன.
இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கியுள்ளனர். சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
நிலைமை சீராக சில வாரம் ஆகும் என கூறப்படுகிறது.