பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்; அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்; அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு

விபி-ஜி ராம் ஜி சட்​டம் குறித்து நாடாளு​மன்​றத்​தில் விவாதம் நடத்த எதிர்க்​கட்​சிகள் கோரிக்கை வைத்​தன. ஆனால், மத்​திய அரசு இதை நிராகரித்​துள்​ளது.

நாடாளு​மன்​றத்​தின் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் இன்று (ஜனவரி 28) தொடங்​கு​கிறது. இந்​தக் கூட்​டத் தொடர் ஏப்​ரல் மாதம் 2ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதனிடையே பிப்​ர​வரி 1ம் தேதி 2026- 27ம் நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இந்​நிலை​யில், நாடாளு​மன்ற கூட்​டத்​தொடர் தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக, மரபுப்​படி நடை​பெறும் அனைத்​துக் கட்சி கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

நாடாளு​மன்ற இணைப்பு கட்​டிடத்​தில் உள்ள முதன்மை குழு அறை​யில், நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு தலை​மை​யில் இந்​தக் கூட்​டம் நடை​பெற்​றது. இந்​தக் கூட்​டத்​தில் நாடாளு​மன்ற கூட்​டத் தொடரில் விவாதத்​துக்கு வரவிருக்​கும் முக்​கிய பிரச்​சினை​கள், சட்ட மசோ​தாக்​கள் குறித்​தும், அவையை சுமூக​மாக நடத்​து​வது குறித்​தும் விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இந்த கூட்​டத்​தின்​போது மகாத்மா காந்தி ஊரக வேலை​ வாய்ப்​புத் திட்​டத்​துக்கு மாற்​றாக மத்​திய அரசு புதி​தாக கொண்டு வந்​துள்ள விபி ஜி ராம் ஜி சட்​டத்தை திரும்ப பெற வேண்​டும் என்று எதிர்க்​கட்​சிகள் வலி​யுறுத்​தின.

இதற்கு மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறும்​போது, ”சட்​டம் ஒரு​முறை நிறைவேற்​றப்​பட்டு நாட்டு மக்​களின் முன்பு வந்துவிட்டால், நாம் அதைப் பின்​பற்ற வேண்​டும். நம்​மால் பின்னோக்​கிச் சென்று கடந்த காலத்​துக்​குத் திரும்ப முடி​யாது. அது நடக்​காது. மக்​களின் பிரச்​சினை​களை எழுப்​புவதற்​காகவே நாம் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளோம். நமக்கு பேச்சு சுதந்​திரம் உண்​டு. ஆனால் கேட்​பதும் நமது கடமையே” என்று தெரி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து இந்த சட்​டம், எஸ்​ஐஆர் பிரச்​சினை ஆகியவை குறித்து நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் விவாதம் நடத்த மத்​திய அரசு ஒப்​புக்​கொள்​ள வேண்​டும் என்று எதிர்க்​கட்​சிகள் வலி​யுறுத்​தின. ஆனால், எதிர்க்​கட்​சிகளின் இந்​தக் கோரிக்கையை​யும் மத்​திய அரசு நிராகரித்​துள்​ளது. எஸ்​ஐஆர் தொடர்​பாக ஏற்​கெனவே நாடாளு​மன்​றத்​தில் விவாதம் நடத்​தப்​பட்டு விட்​ட​தால், மீண்​டும் ஒரு முறை விவாதம் நடத்த அனு​ம​திக்க முடி​யாது என்று மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​தார்.

தொடர்ந்து 9-ம் முறை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா

ரும் பிப்​ர​வரி 1-ம் தேதி 2026- 2027ம் நிதியாண்டுக்கான பொது பட்​ஜெட்டை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்மலா சீதா​ராமன் தாக்​கல் செய்ய​வுள்​ளார்.

கடந்த 2019-ல் மத்​திய நிதி அமைச்​ச​ராக பொறுப்​பேற்ற நிர்​மலா சீதா​ராமன், தொடர்ச்​சி​யாக பட்​ஜெட் தாக்​கல் செய்து வரு​கிறார். 2024-ல் அவர் இடைக்​கால பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார். தற்​போது அடுத்த நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட்டை தாக்​கல் செய்ய உள்​ளதன் மூலம் தொடர்ச்​சி​யாக 9 பட்​ஜெட்​களை தாக்​கல் செய்த முதல் நிதி​யமைச்​சர் என்ற பெரு​மை​யைப் பெறவுள்​ளார் மத்திய அமைச்சர் நிர்​மலா சீதா​ராமன்​.