இந்திய ஒரு நாள் அணியில் இருந்து நீக்கப்படுகிறாரா ரிஷப் பந்த்?

இந்திய ஒரு நாள் அணியில் இருந்து நீக்கப்படுகிறாரா ரிஷப் பந்த்?

நியூசிலாந்து ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு நாள் தொடர் ஜனவரி 11 ஆம் தேதி முதலும், டி20 கிரிக்கெட் தொடர் ஜனவரி 20 ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளன.

இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் மிட்செல் சான்ட்னருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டதால், நியூசிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.