அமைச்சர் நேருவுக்கு எதிராக முதல்கட்ட விசாரணை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அமைச்சர் நேருவுக்கு எதிராக முதல்கட்ட விசாரணை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அமலாக்​கத்​ துறை குற்​றச்​சாட்டு தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத்​துறை முதல்கட்ட விசா​ரணை நடத்தி வரு​வ​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில், உதவிப் பொறி​யாளர், இளநிலைப் பொறி​யாளர், சுகா​தார ஆய்​வாளர் உள்​ளிட்ட 2,538 பணி

நியமனங்​களுக்கு கோடிக்​கணக்கில் லஞ்​ச​மாக பெறப்​பட்​டுள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்க டிஜிபி-க்கு உத்​தர​விடக்​கோரி மதுரை திரு​மங்​கலத்​தைச் சேர்ந்த ஆதி​நா​ராயணனும் அதி​முக எம்.பி. இன்​பதுரையும் மனு​ தாக்ல் செய்திருந்தனர்.அதில் அமைச்​சர் நேரு, அவரது குடும்பத்​தினர் மீது வழக்​குப்​ப​திந்து லஞ்ச ஒழிப்​புத் துறை விசா​ரிக்க கோரி​யிருந்​தனர்.

இந்த வழக்​கு​கள் மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது ஆஜரான அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், டிஜிபிக்கு அமலாக்​கத் ​துறை அனுப்​பிய கடிதத்​தின் அடிப்​படை​யில் லஞ்ச ஒழிப்​புத்​துறை முதல்கட்ட விசா​ரணை நடத்தி வரு​வ​தாகக் கூறி அதுதொடர்​பான அறிக்​கையை தாக்​கல் செய்​தார்.

மேலும் டிஜிபி தரப்​பில் பதில்​மனு தாக்​கல் செய்​ய​வும் அவகாசம் கோரப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக ஜன.28-க்​குள் பதில்​மனு தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளனர்​.