பிஹார் தொழிலாளி, அவரது மனைவி, குழந்தை கொலை: தலைவர்கள் கண்டனம்

பிஹார் தொழிலாளி, அவரது மனைவி, குழந்தை கொலை: தலைவர்கள் கண்டனம்

பிஹார் தொழிலா​ளி, அவரது மனை​வி, 2 வயது ஆண் குழந்தை ஆகியோர் கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, பாமக நிறு​வனர் ராம​தாஸ் உட்பட பல்​வேறு கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை தரமணி​யில் பிஹார் இளைஞர், அவரது மனை​வி, 2 வயது குழந்தை ஆகியோர் படுகொலை செய்​யப்​பட்​டனர். இதுதொடர்பாக, அவரது நண்​பர்களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​தச் சம்​பவத்​துக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உட்பட பல்​வேறு கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தரமணி பகு​தி​யில் பிஹார் மாநில இளைஞர், அவரது மனைவி மற்​றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூர​மாக கொல்​லப்​பட்​டுள்ள சம்​பவம் மிகுந்த அதிர்ச்​சியை ஏற்​படுத்​துகிறது.

சில நாட்​களுக்கு முன்​பு​தான் திருத்​தணி​யில் மகா​ராஷ்டிர இளைஞர் ஒரு​வர் கொடூர​மாக தாக்​கப்​பட்ட சம்​பவம் நடந்​தது. தற்​போது ஒரு வடமாநில குடும்​பம் மொத்​த​மாக கொல்​லப்​பட்​டுள்​ளது. இது தமிழகத்​தில் திமுக ஆட்​சி​யில் சட்​டம் - ஒழுங்கு சந்தி சிரிக்​கிறது என்​பதை பட்​ட​வர்த்​தன​மாக காட்டு​கிறது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: இக்கொலைக்கு அடிப்​படைக் காரணம் மது. அண்​மை​யில் தஞ்​சை​யில் நடை​பெற்ற திமுக மகளிர் மாநாட்​டில் பேசிய முதல்​வர் ஸ்டா​லின், பெண்​களுக்கு பாது​காப்​பான சூழல் உரு​வாக்​கிய​தால்​தான் தமிழகத்​தில் அதிக அளவி​லான பெண்​கள் தொழிற்​சாலைகளில் பணி​யாற்​றுகிறார்​கள் என்​றார்.

அப்​படி சொன்ன மறு​நாளே கொடூர கொலை நடந்​துள்​ளது. வேலை கேட்டு நம்பி வந்த குடும்​பத்தை நம்​பிக்கை துரோகம் செய்து மது​போதை​யில் கொன்​ற​தாக கொலை​யாளி​கள் வாக்​குமூலம் அளித்​துள்​ளனர். பெண்​கள் அச்​சமின்றி வாழ இனி​யா​வது மதுவை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுக்​கவேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: இத்​தகைய செயல்​களில் ஈடு​பட்​டுள்ள கொடூர மனம் படைத்​தவர்​கள் அனை​வரை​யும் கைது செய்​து, இனிவரும் காலங்​களில் இது​போன்ற செயல்​கள் நடை​பெறாத அளவுக்கு கடுமை​யான தண்​டனையை வழங்க வேண்​டும்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: தமிழகத்​தில் வாழும் மக்​களுக்கு பாது​காப்பு வழங்​கு​வ​தில் தமிழக அரசின் சட்​டம் ஒழுங்கு செயலற்று கிடைக்​கிறது. குற்​ற​வாளி​களை சட்​டத்​தின் முன் நிறுத்தி கால​தாமதமின்றி அதி​கபட்ச தண்​டனைப் பெற்​றுத்தர வேண்​டும்.

தவாக தலை​வர் வேல்​முரு​கன்: இந்த வழக்​கில் தொடர்​புடைய​தாக பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த சம்​பவம், ஒரு தனிப்​பட்ட குற்​றம் அல்ல. இது பாது​காப்​பற்ற அரசு அமைப்​பு​களின் அலட்​சி​யத்​தின் விளைவு. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.