பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அஸமுக்கு அபராதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அஸமுக்கு அபராதம்

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை ராவல்பிண்டியில் நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. கடைசி போட்டியின் 21-வது ஓவரில் பாகிஸ்தான் அணியின் சீனியர் பேட்ஸ்மேனான பாபர் அஸம் ஆட்டமிழந்தார். அப்போது விரக்தியில் அவர், மட்டையால் ஸ்டெம்புகளை தாக்கிவிட்டு சென்றார்.