முல்லை பெரியாறில் புதிய அணை கோரி மனு: தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ்

முல்லை பெரியாறில் புதிய அணை கோரி மனு: தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ்

முல்லை பெரி​யாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்​டக்கோரி ‘சேவ் கேரளா பிரி​கேட்’ என்ற தொண்டு நிறு​வனம் சார்​பில் தொடரப்​பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், கே.​வினோத் சந்​திரன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தலைமை நீதிப​தி அமர்விடம் மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வி.கிரி வாதிடும் போது இது 130 ஆண்​டு​கள் பழமை​யானது என்​ப​தால், அணை​யின் கீழ்ப்​பகு​தி​யில் வசிக்​கும் சுமார் ஒரு கோடி மக்​கள் அச்​சத்​தில் உள்​ளனர் என்றார். அப்போது நீதிப​தி​கள் கூறியதாவது: தற்​போதுள்ள அணையை பலப்​படுத்​துங்​கள் என்று உத்​தர​விடலாம். இருமாநிலங்​கள் தொடர்​புடையமுல்லை பெரி​யாறு அணை​யால் யாருக்கு என்ன பிரச்​சினை என்​பதை மனு​தா​ரர்தெளி​வாக தெரிவிக்​க​வில்​லை.

பழைய அணைக்கு பதிலாக புதி​தாக அணை கட்​டி​னால், தமிழக அரசின் எதிர்​பார்ப்பு எப்​படி இருக்​கும், புதிய அணை கட்​டக் கோரு​வது தொடர்​பாக மத்​திய அரசு, தமிழக, கேரள அரசுகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை​யம் பதில்அளிக்க வேண்​டும்.இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசா​ரணையை தள்​ளி​வைத்​தனர்.