‘ரெட் அலர்ட்’ - 1.24 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி

‘ரெட் அலர்ட்’ - 1.24 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி

கனமழை தொடர்பாக தமிழகத்​தில் 1.24 கோடி பேருக்கு எச்​சரிக்கை குறுஞ்​செய்தி அனுப்​பப்​பட்​டுள்​ளது.

புயல், மழை பாதிப்​பு​கள், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தொடர்​பாக சென்னை எழில​கத்​தில் உள்ள மாநில அவசர​கால கட்​டுப்​பாட்டு மையத்​தில் நேற்று வரு​வாய்த் துறை அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் ஆய்வு மேற்​கொண்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தாழ்​வான பகு​தி​களில் இருப்​பவர்​களைத் தங்​கவைக்க திருமண மண்​டபங்​கள், அவர்​களுக்​குத் தேவை​யான உணவு, குழந்​தைகளுக்கு பால் போன்​றவற்றை தயா​ராக வைக்​கு​மாறு அனைத்து மாவட்ட நிர்​வாகங்​களுக்​கும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் மாநில பேரிடர் மீட்​புப்​படை சார்​பில் 16 அணி​களும், தேசிய பேரிடர் மீட்​புப்​படை சார்​பில் 12 அணி​களும் தயார் நிலை​யில் உள்​ளன.

இது​வரை புயல், மழை​யால் பெரிய பாதிப்பு ஏற்​பட​வில்​லை. 16 கால்​நடைகள் இறந்​துள்​ளன. 24 குடிசைகள் சேதமடைந்​துள்​ளன. புயல் வந்​தால், அதை எதிர்​கொள்​வது தொடர்​பாக 1.24 கோடி பேருக்கு குறுஞ்​செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்​பப்​பட்​டுள்​ளது. காற்​றின் வேகம் அதி​க​மாக இருக்​கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. எனவே, பொது​மக்​கள் யாரும் கடற்​கரை ஓரமாகச் செல்​வதை தவிர்க்க வேண்​டும். புயல் நேரத்தில் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

4,000 கனஅடி வெளி​யேற்​றம்: சென்​னைக்கு குடிநீர் விநி​யோகிக்​கும் பூண்டி சத்​தி​யமூர்த்தி சாகர் நீர்த்​தேக்​கத்​தில் இருந்து நேற்று மாலை முதல் வி​நாடிக்கு 4,000 கனஅடி வீதம் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. அதே​போல, செம்​பரம்​பாக்​கம் ஏரியி​லிருந்​து 2,000 கனஅடி​யும்​, புழல்​ ஏரியி​லிருந்​து 1,500 கனஅடி​யும்​ உபரி நீர்​ வெளியேற்​றப்​பட்​டு வருகிறது.