பேராசிரியர் காலி பணியிடம்: உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் உறுதி

பேராசிரியர் காலி பணியிடம்: உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் உறுதி

அரசுக் கல்​லூரி​களில் பேராசிரியர் காலி பணி​யிடங்​கள் இல்லை என்ற நிலையை எட்​டு​வதற்​கான முயற்​சிகளை உயர் கல்​வித் துறை எடுத்து வரு​வ​தாக தமிழக உயர் கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார்.

தஞ்​சாவூரில் நடை​பெற்ற முதல்​வர் கோப்பை மாநில அளவி​லான பள்ளி மாணவி​களுக்​கான கால்​பந்து போட்​டி​யில் வெற்றி பெற்ற நாமக்​கல் மாவட்ட அணிக்கு ரூ.13.50 லட்​சம் பரிசுத் தொகைக்​கான காசோலை, 2, 3-வது இடங்​களை முறையே பெற்ற திரு​வாரூர் மாவட்ட அணிக்கு ரூ.9 லட்​சம், தென்​காசி மாவட்ட அணிக்கு ரூ.4.50 லட்​சம் காசோலைகளை அமைச்​சர் கோவி.செழியன் வழங்கினார்.

பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் புதி​தாக 34 அரசுக் கல்​லூரி​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. 64 கல்​லூரி​களில் 2 ஷிப்ட் முறை, புதிய பாடத் திட்​டங்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதற்​கான ஆசிரியர்​கள் தேவையை உணர்ந்து 2,703 பேரை நிரந்தர அடிப்​படை​யில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

கவுரவ விரிவுரை​யாளர்​களுக்​கான நேர்​காணல் நடை​பெற்று வரு​கிறது. இன்​னும் ஒரு மாதத்​துக்​குள் 2,700 நிரந்தர பேராசிரியர்​களை நியமிக்க டிஆர்பி மூலம் தேர்வு நடத்​த​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் உள்ள அரசுக் கல்​லூரி​களில் பேராசிரியர் காலி பணி​யிடங்​கள் இல்லை என்ற எல்​லையை எட்​டு​வதற்​கான முயற்​சிகளை உயர் கல்​வித் துறை எடுத்து வரு​கிறது என்​றார்.

தஞ்​சாவூர் எம்​.பி. முரசொலி, எம்​எல்​ஏக்​கள் துரை.சந்​திரசேகரன், டிகேஜி.நீலமேகம், தஞ்​சாவூர் தடகள சங்​கத் தலை​வர் டி.கிருஷ்ண​சாமி வாண்​டை​யார், மாவட்ட விளை​யாட்டு அலு​வலர் டேவிட் டேனியல் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.